முத்தொழிலும் கொண்டதுதான் 'ஓம்' என்ற பிரணவ மந்திரம். ஆ ( ஆக்கல் ) + உ ( காத்தல் ) + ம ( ஒடுக்கல்) = ஓம். இங்கு ம் + உ, ர்+ உ, க + உ = முருகு என்பது காத்தல். முருகு என்பவன் தமிழ்க் கடவுள். உன்னை எல்லா சூழலிருந்தும் காப்பது உன் அறிவு. அறிவே தமிழ், தமிழே முருகன்.

ஓம் என்ற ஒலியில்தான் பிரபஞ்சம் தோன்றியது என் முன்னோர்கள் சொல்கின்றனர். ஓம் என்ற பிரணவப் பொருள் முருகன். இங்கு ப்ர என்பது சிறப்பு என்றும் நவ என்பது புதுமை என்றும் பொருள்படுகிறது. சிறந்த புதிய ஆற்றலைத் தருவதுதான் பிரணவம்.

ஓம் என்ற சொல் அ + உ + ம் என்ற ஒலியிலிருந்து பிறக்கிறது. அ என்பது சிருஷ்டிக்கிறது. உ என்பது இரட்சிக்கின்றது மற்றும் ம என்பது ஒடுக்குகிறது. ஆக முத்தொழிலாக விளங்கும் ஓம் என்ற மந்திரமே முருகன்.

இந்த கூற்றை விளக்குகிறார் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு கார்த்திகேஸ் பொன்னையா!





புகைப்பட மூலம்: www.pinterest.com